தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், க.குறிச்சி, சேலம், தி.மலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கலாம். அதனால், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கவனமாக செல்லுங்கள்.