கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,  15 லட்சம் தருகிறேன் என்று போய் கூறிவிட்டு…  15 ரூபாய் கூட கொடுக்காதவர்கள்..  ஸ்மார்ட் போன் தரேன்,  வாஷிங் மெஷின் தரேன்னு வாயில புரூடா விட்டவர்கள் எல்லாம் நம்முடைய திட்டத்தை விமர்சிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த இந்தியாவினுடைய நம்பிக்கையாக…  ஒரே நம்பிக்கையாக…  ஒற்றை நம்பிக்கையாக… நம்முடைய தலைவர் அவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் மத்திய பிரதேசம் நடக்கின்ற பாஜக கூட்டத்தில் நம்முடைய  ஒன்றிய பிரதமர் திரு  மோடி அவர்கள் திமுக-வை விமர்சித்து பேசிட்டு இருக்கிறார். எங்க போனாலும் அவருக்கு திமுக நியாபகம்தான்.  இதற்கு முன்பு பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு கட்சியை ஆட்சி செய்து கொண்டிருந்தது. 

உங்களுக்கு தெரியும் நான் எதைப் பற்றி சொல்லுகிறேன் என்று…. அது எப்படிபட்ட இருண்ட கால ஆட்சியாக இருந்தது என்பதை மக்கள் நன்றாக அறிவீர்கள். அதிலும் குறிப்பிட்டு சொல்ல போனால் ?  அம்மையார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு எப்படி ஒரு அலங்கோலமான ஆட்சி நடந்தது என்று உங்களுக்கு தெரியும். போட்ட ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர் நம்மள ஆண்டாங்க என அதிமுகவை விமர்சனம் செய்தார்.