சமீபத்தில் நடைபெற்ற ஏழு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கலாம். கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம் கட்சியும், திரிபுரா மாநிலத்தின் 2 சட்டமன்ற தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

மேலும் உத்தரகாண்டில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில்  சமாஜ்வாதி முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தேசிய அளவில் நடைபெற்ற ஏழு சட்டமன்ற தொகுதிகள் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதிகளிலும்,  பாரதிய ஜனதா கட்சி மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.