பிக்பாஸ் சீசன்-6 finale சென்ற ஞாயிறுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது. அப்போது பைனலிஸ்ட்டாக விக்ரமன் மற்றும் அஸீம் போன்றோர் வந்தனர். இந்நிலையில் இறுதியில் அஸீம் கையை உயர்த்தி அவர் வெற்றியடைந்ததாக கமல் அறிவித்தார். எனினும் நெட்டிசன்கள் பலரும் இந்த முடிவுக்காக விஜய் டிவியை ட்ரோல் செய்தனர்.

அதாவது விக்ரமனுக்கு ஆதரவு அதிகம் இருந்த நிலையில், சர்ச்சைகளை ஏற்படுத்திய அசீமை எப்படி வெற்றியாளராக அறிவித்தார்கள் என பலரும் கேள்வி எழுப்பினர். அஸீம் தவறு செய்தாலும் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. இதனிடையில் வாக்குகள் அதிகம் கிடைத்ததால் தான் அஸீம் ஜெயித்தார் என அவருக்கு ஆதரவாகவும் பலரும் பேசினார்கள்.

இந்த நிலையில் விக்ரமன் ரசிகர்கள் உடன் லைவ்வில் நேரடியாக உரையாடினார். அப்போது அசீம் குறித்து கேட்ட கேள்விக்கு “விளம்பரத்துக்காக இப்படி பண்ணிட்டாரு பாவம்” என கூறி இருக்கிறார் விக்ரமன். அதோடு அஸீம் தனது பரிசுத்தொகையில் பாதியை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கொடுப்பதாக அறிவித்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்..

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)