வருகிற 27-ஆம் தேதி தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆறாவது கட்ட ஏலத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. இதற்கு தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதில் 27 சுரங்கங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏலம் கோரி இருந்த நிலையில் இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் வருகிற 27-ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.