தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மது விற்பனை கூடங்கள், உரிமம் பெற்ற தனியார் ஹோட்டல்களின் மது கூடம், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவற்றை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறி செயல்பட்டாலும் அல்லது கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…
Read moreவேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!
வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…
Read more