அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவையடுத்து  ஜாமீன் மனு தாக்கல் செய்ததாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தார்.