முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக நடிகை குஷ்பு பணிபுரிந்து வந்தார். இதையடுத்து அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் “நான் ஒரு காயம்பட்ட புலி. என் கணவரை பற்றி இனி யாரும் பேசக்கூடாது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

குஷ்புவின் கணவர் மோசடி செய்து சிறைக்கு சென்றதாகவும், அவரை வெளியே விட வேண்டும் என்றால் குஷ்பு பாஜகவில் சேர வேண்டும் என்று பாஜக தலைமை வற்புறுத்தியதாகவும் பால் கோஷி என்ற காங்கிரஸ் ஆதரவாளர் பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.