சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவில் குமார்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி குமார் ஆட்டோவில் எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி முன்னால் வந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி குமார் ஓட்டி வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.