கடலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வீட்டிற்கு அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலை கண்விழித்து பார்த்த ரமேஷ் வீட்டிற்கு வெளியே தனது ஆட்டோ தீயில் கருகி எலும்பு கூடாய் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நள்ளிரவில் ஆட்டோவுக்கு யாரேனும் தீ வைத்து சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.