சென்னை மாவட்டத்தில் உள்ள சண்முகபுரம் நேதாஜி நகரில் மேக்ஸ்வெல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். நேற்று மாலை மேக்ஸ்வெல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்த தப்பி சென்றனர். இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மேக்ஸ்வெலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் மேக்ஸ்வெல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மேக்ஸ்வெலுக்கு மோசஸ், லாரன்ஸ் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு உதயகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் மேக்ஸ்வெலை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் தப்பி ஓடிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.