கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில் வீதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த நான்காம் தேதி சித்ரா அப்பகுதியில் இருக்கும் தேவாலயத்திற்கு சென்று விட்டு தாமதமாக வீட்டிற்கு வந்தார்.

இதனால் கோபமடைந்த ராமகிருஷ்ணன் எங்கே சென்று ஊர் சுற்றி விட்டு வருகிறாய் என கேட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சித்ரா சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.