தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது. இதேபோன்று 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கான பொது தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது தேர்வு துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்வு அறைக்கு வரும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப் பட்டுள்ளது. இதேபோன்று தேர்வு அறையில் பணிகள் இருக்கும் ஆசிரியர்களும் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தகவல் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.