திருப்பதியில் வருகிற ஜனவரி 12-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனை பக்தர்கள் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலமாக முன் பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில் தேவஸ்தானம் சார்பாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதியாக தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு 6 ஆயிரம் அறைகள்  வாடகைக்கு விடப்பட்டு வந்தது.

இதனையடுத்து சேதமடைந்த அறைகள் ரூ.110 கோடி செலவில் தேவஸ்தானம் சார்பாக மறு சீரமைப்பு பணி நடைபெற்றது. இந்நிலையில் தங்கும் அறை வாடகை 3 முதல் 4 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தெலுங்கு தேசம் பா.ஜ.க காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேவஸ்தான நிர்வாக கட்டிட அலுவலகம் அருகே தெலுங்கு தேசம் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. அதேபோல் அறை கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.