புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 66 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதன் ஐந்தாவது சுற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் காவலர்கள் உட்பட 66 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.