பெங்களூர் பசவேஸ்வரர் நகரில் நேஷனல் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மாணவர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனையடுத்து போலீசார்  சோதனை செய்தபோது எதுவும் கிடைக்காததால் தகவல் அளித்தவரை ஐ.பி முகவரி மூலம் தேடிய போது மாணவர் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விடுமுறைக்காக இதை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.