கேரள மாநிலம் வங்கித் துறை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்படும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இலக்கை அடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த விரிவான பிரச்சாரத்தின்  ஒரு பகுதியாக மாநில அளவிலான பிரச்சார சின்னத்தை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை அனைவரும் செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். மேலும் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

அந்த வகையில் திருச்சூர் மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு அதன் பின் கோட்டயத்தில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படுகிறது. இந்த பிரச்சாரத்தில் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் அரசு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும். இந்நிலையில் பினராயி விஜயன் கூறியதாவது, தினசரி வங்கி சேவையில் டிஜிட்டல் பேங்கிங் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு படியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரளா முழுவதும் டிஜிட்டல் பாங்கிங்கிற்கு மாறி உள்ளதாக கூறியுள்ளார். மாநில அளவிலான வங்கிகளின் குழு அழித்த தகவலின் படி மாநிலத்தில் குறைந்தது 3.76 கோடி வங்கி கணக்குகளில் டிஜிட்டல் பேங்கிங் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.