ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள ஒரு காட்டு யானையை ஒருவர் கையெடுத்து கும்பிடுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் செல்லும்போது வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து அச்சத்தோடு செல்லும்போது முருகேசன் என்கிற மீசை முருகேசன் மரத்தோரமாக நின்று கொண்டிருந்த காட்டு யானையின் அருகில் சென்று அதை கையெடுத்து கும்பிட்டுள்ளார்.

அப்போது யானை கோபத்தில் சீரிய நிலையில் மீசை முருகேசன் அங்கிருந்து பின்வாங்கினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் வனத்துறையினர் மீசை முருகேசனுக்கு பத்தாயிரம் ரூபாயை அபராதமாக விதித்தனர். மேலும் அந்த அபராத தொகையை மீசை முருகேசன் செலுத்திவிட்டு அப்பகுதியில் இருந்து சென்றுள்ளார்.