தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவானது மே 8 ஆம் தேதி வெளியானது. இதில்  7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற உள்ளது.

இதனையடுத்து +2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் மே 11 முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 23ம் தேதி வரை நீட்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது கடைசி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.