விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.

இந்நிலையில் விஷ சாராய உயிரிழப்பை கண்டித்து வரும் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டத்தை பெண்கள் முன் நின்று நடத்தவுள்ளனர். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் அண்ணாமலை கலந்துக் கொள்கிறார். மேலும், இப்போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.