முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை அனைத்து சேகர்பாபு அறிவுரையின்படி கோவில்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பக்தர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் திருக்கோயில் பிரசாதம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோயில்களின் பிரசாதங்கள் அஞ்சல் மூலம் வழங்கப்பட உள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் தல வரலாறு, கட்டண விவரம், திருவிழாக்கள் போன்ற தகவல்களை அறிந்துக் கொள்ளும் வகையில் “திருக்கோயில்” என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.