சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இதில் ஏற்கனவே குமரேசன் உயிரிழந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர்ராஜ் (27) சிகிச்சை பலனின்றி உயரிழந்தார்.

இதனால், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சையில் உள்ள இருளாயி என்பவருக்கு ரூ.50ஆயிரம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.