விண்ணப்ப படிவத்துடன் கூட்டு பிரகடனம் உள்ளிட்ட பிற துணை ஆவணங்களை பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை ஒருங்கிணைத்து முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். FO விபரங்கள் மற்றும் முதலாளிகளின் விவரங்கள் பொருந்தும் வழக்குகள், நிலுவைத்தொகைகள் கணக்கிடப்பட்டு, நிலுவைத்தொகையை டெபாசிட் செய்ய/டிரான்ஸாக்ஷன் செய்ய APFC/RPFC-II/ RPFC-I ஆல் ஆர்டர் அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிடையில் பொருந்தாத வழக்குகள், APFC/RPFC-II வாயிலாக முதலாளி, பணியாளர், ஓய்வூதியத்தை பெறுபவர்களுக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்வதற்கு அவர்களுக்கு சுமார் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு தெரிவித்து உள்ளது.