மகரம் ராசி அன்பர்களே…! கவனமாக படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறலாம்.

வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு இல்லங்களை அமைதி ஏற்படுத்துங்கள். கோபத்தைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் இனிமையாகப் பேசுங்கள். காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவைப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ பேச்சு தான் காரணமாக இருக்கும். உங்களுடைய பேச்சை பொறுத்தே எந்த ஒரு விஷயமும் நடக்கும். கணவன் மனைவி இடையே ஊழல் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும்.

காதலில் உள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.
அதிஷ்ட எண் 6 மற்றும் 8.
அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.