கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் ஜோதிடர்கள். சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு பேரும் மொபட்டில் ஆனைகட்டிக்கு ஜோதிடம் பார்க்க சென்றனர். பின்னர் ஜோதிடம் பார்த்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆனைகட்டி ரோடு மாங்கரை அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னத்தம்பி உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.