கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன நெகமத்தில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேன்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும் பக்கத்து கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இளம்பெண்ணை வேலையை விட்டு நிறுத்தினார். சம்பவம் நடைபெற்ற அன்று இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து காதலனை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர் தங்களது மகளை மீட்டுத் தருமாறு நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.