கர்நாடக மாநிலம் ஹாசனில், இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்கும் தனது காதலியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் தேஜாஸ் என்ற 23 வயது இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தேஜாஸ் மற்றும் இறந்த பெண்ணும் ஒரே  கல்லூரியில் பயின்றவர்கள், இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபகாலமாக இருவருக்குமிடையே  வாக்குவாதம் முற்றியுள்ளது. மேலும் தேஜாஸ் பெண்ணை சந்தேகித்து துன்புறுத்தியுள்ளார்.இதனால் வேதனையடைந்த அந்தப் பெண்,

உறவை முறித்துக் கொள்ள விரும்பினாள். இதையடுத்து வியாழனன்று, தேஜஸ் அவளை குந்தி பெட்டா மலைப்பகுதிக்கு அவர்களது பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து தீர்வு காணலாம் என கூறி அவளைக் கூட்டிச்செல்ல,  அங்கு சென்றதும் மற்றொரு தகராறு தீவிரமடைந்து, கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்து  தேஜாஸ் பெண்ணை கொலை  செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார், இதையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, போலீசார் கொலை வழக்கை பதிவு செய்து, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302ன் கீழ் தேஜாஸை கைது செய்தனர்.