திருச்சி சமயபுரத்தில் 30 வயது நிரம்பிய பிரபு என்பவரது மனைவி வினோதினிக்கும் பாரதி என்ற நபருக்கும் இடையே உள்ள தகாத உறவு ஏற்பட,  வினோதினியும் பாரதியும் அடிக்கடி ஒன்றாக அடிக்கடி நேரில் சந்தித்து நேரத்தை செலவிட்டு வந்துள்ளனர்.  இதை பிரபு கண்டுபிடித்ததால், தம்பதியரின் உறவில் விரிசல் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இதுவே அவர்களுக்கிடையே மோதல் வலுக்க காரணமாகியுள்ளது. 

இந்த உறவு குறித்த பதற்றம் அதிகரித்ததால், இது  குறித்து பிரபு தனது மனைவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது இருவருக்கும் இடையே கடினமான  வாக்குவாதத்தைத் தூண்டியது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரபுவை வினோதினி  கொன்றதாகக் கூறப்படுகிறது. பின் அவரது உடலை அப்படியே விட்டுவிடாமல்,  குற்றத்தை மறைக்க, பிரபுவின் உடலைத் துண்டித்து, ஒரு பாதியை எரித்து, மற்றொன்றை அருகிலிருந்த காவிரி ஆற்றில் வீசி சென்றுள்ளார் வினோதினி.இதையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட வினோதினி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.