திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் அடுத்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். இரண்டு ஆண்டுகள் சமுதாய பணியாற்ற இவர்களுக்கு  மாதம் ரூ.5,000 மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பெண்கள் இளைஞர்கள் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

முழுநேர மாணவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. www.nyks.nic.in என்ற இணையதள முகவரியிலும் நேரு யுவகேந்திரா அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் அதற்கான விண்ணப்பத்தை நகல் எடுத்து நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அந்தந்த ஒன்றியங்களில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். வருகிற ஒன்பதாம் தேதி இதற்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள திருவாரூரில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.