நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், நள்ளிப்பாளையம், எருமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 23 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் எருமப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் நாமக்கல் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கும், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதா பரமத்தி வேலூர் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவிற்கும், குமாரபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வெப்படை போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து ஆயில் பட்டியல் பணியாற்றி வந்த சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் நாமகிரிப்பேட்டைக்கும், மங்களபுரத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணி திம்மநாயக்கன்பட்டிக்கும், ஜேடர்பாளையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் பரமத்தி வேலூருக்கும் என 23 சப் இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.