திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் மேளவாசல் அருகே ஒரத்தநாடு பிரிவு சந்திப்பு அமைந்துள்ளது. ஒரத்தநாடு வழியாக வல்லம் நெடுஞ்சாலை சென்று வாகனங்கள் திருச்சிக்கு செல்கிறது. இதனால் மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு செல்லும் பிரிவு சந்திப்பில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கிறது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால்  இந்த இடங்களில் இரவு நேரங்களில் உயர் கோபுர மின்விளக்கு இல்லாத காரணத்தினால் திருட்டு, வழிப்பறி மற்றும் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து இந்த இடத்தில் உயர் கோபுரம் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.