தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கவிப்பிரியாவிடம் விசாரித்தனர். அப்போது தான் விஷம் குடித்து விட்டதாக கவிப்பிரியா தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கவிப்பிரியா அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கவிப்பிரியா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.