சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூஷன் முடிந்து சகோதரியுடன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வெறிபிடித்த தெரு நாய் விடாமல் துரத்தியதால் சிறுமிகள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டை காந்தி நகரில் தேன்மொழி என்ற பெண் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது தெரு நாய் விரட்டியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த படுகாயமடைந்த தேன்மொழி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.