இபிஎஸ்க்கு எதிராக டெண்டர் முறை கேட்டு  புகார் குறித்து உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.  டெண்டர் முறைகேடு புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இபிஎஸ் முதல்வராக இருந்தபோது 4, 800 கோடி அளவுக்கு நெடுஞ்சாலை டெண்டர் எடுத்ததில் முறைகேடு என புகார். ஆர் எஸ் பாரதி கொடுத்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்துள்ளது.