வால்கம்மிங் நிறுவனம் விரைவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான செய்தி அனுப்பும் திறனை ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆண்ட்ராய்டு போன்களில் செயற்கைக்கோள் அடிப்படையிலான செய்தி அனுப்பும் திறனை செயல்படுத்த பல முக்கிய போன் நிறுவனங்களுடன் இத்திட்டத்தை சோதனை செய்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மற்ற தொலைத்தொடர்பு நெட்வொர்க் இல்லாத அல்லது கிராமப்புற பகுதிகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்புகள் அனுப்பவும் பெறவும் முடியும். பல முன்னணி போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இத்திட்டத்தை சோதனை செய்து வரும் நிலையில் இந்த ஆண்டில் இறுதிக்குள் சில முக்கிய ஆண்ட்ராய்டு போன்களில் இச்செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக வால்கம் நிறுவனம் தெரிவித்துள்ளது.