மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாளை அனைத்து வங்கிகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏடிஎம்மில் பணம் தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே, இன்றே முன்னெச்சரிக்கையாக அத்தியாவசிய தேவைக்கான பணத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.