மிக்ஜாம் புயல் எதிரொலியால் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் புயல் தாக்க உள்ள நிலையில், எச்சரிக்கை காரணமாக சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வர் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாகவும், மறு மார்க்கத்தில் நாளை மறுநாள் இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.