சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு இரண்டாவது முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகை உயர்த்தப்பட்டு இருப்பது மாற்றுத்திறனாளிகளின் ஏற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவும் என தெரிவித்துள்ளார்.