மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இந்த தேர்வுகள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்படுவதாகவும் மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.