ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய  முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  பல்வேறு சமூக பொருளாதார நிலை, அண்டாத நிகழ்வுகள், வெளி மாநில செய்திகள், வெளிநாடு செய்திகள், உலக அரசியல், உலக அரங்கில் எடுத்து வைக்கின்ற நல்ல காரியங்கள், நல்ல நடைமுறைகள். இவைகள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கின்ற பத்திரிக்கையாக  மட்டுமல்லாமல்,

எதிர்காலத்தில் நாம் அடையப் போகின்ற அரசியல் வெற்றியின் மூலமாக அதை செயல்படுத்துகின்ற ஆட்சியின் நடைமுறையாக அதற்கு அடித்தளமாக தான் இந்த புரட்சி தொண்டன் பத்திரிக்கை இன்றைக்கு அந்த குழந்தை பிறந்திருக்கிறது. அதை சீராட்டி வளர்த்து உலக அரங்கில் தலை சிறந்த பத்திரிகை என்ற பெயரை எடுப்பதற்கு நாங்கள் மட்டுமல்ல,  நீங்களும் முழு ஒத்துழைப்பு தந்து, 

உறுதுணையாக இருந்தது பணியாற்ற வேண்டுமென்று நான் உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு... நமது நோக்கம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டனுக்கு அவர்கள் தந்த உச்சபட்ச மரியாதை.. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் எந்த நாடும் தராத உச்சபட்ச  மரியாதை. ஒரு இயக்கத்தினுடைய உச்சபட்ச பதவிக்கு போட்டியிடுகின்ற தகுதியை பெறுகின்ற தொண்டனாக… 

நம்முடைய இயக்கத்தின் சட்ட விதியை புரட்சித் தலைவர் அவர்கள் வகுத்து  தந்திருக்கிறார். வகுத்து  தந்த அந்த விதிக்கு சிறு மாசு  ஏற்படுவதற்கு யாராவது  முயற்ச்சித்தால் அந்த முயற்சியை நாங்கள் முளையிலேயே கிள்ளியெரிகின்ற சக்தியாகத்தான் இந்த புரட்சித்தொண்டன்  நாளிதழ். இருக்கும். இந்த மையக்கருத்தை உருவாக்குகின்ற நாளிதழாக இருக்கும் என்பதெல்லாம் இந்த நல்ல நேரத்தில் தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.