பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய ஆளுநர் அமைத்த குழுவிற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய  தேடுதல் குழுவை ஆளுநர் அமைத்தார். 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய தேடுதல் குழுவை ஆளுநர் தன்னிச்சையாக அமைத்துள்ளார்.

ஆளுநர் ஆரன் ரவி அமைத்த தேர்வுக்குழு தொடர்பான அறிவிப்பை சட்டப்படி எதிர்கொள்வோம்.பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர்  ஒப்புதல் தரவில்லை. பேரவையில் நிறைவேற்றப்பட்டு 2022 ஏப்ரல் 28 மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்