செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அமைச்சர் மா.சு பேசுவதற்கு ஒரு முகாந்திரம் இருக்கணும். ஹெல்த் மினிஸ்டருக்கு தகுதியில்லாதவர்ன்னு  நினைக்கிறேன்.  அவர் மாரத்தான் என ஒரு டிபார்ட்மெண்ட் வச்சி, டெய்லி ஓடுற வேலையே பண்ணிட்டு இருந்தா… Best மினிடரா இருப்பாரு. டெங்குல ஒரு குழந்தை இருந்து இருக்கு. இதுக்கு அமைச்சர் மா.சு  பதில் சொல்லுவாரா ? அவங்க என்ன சொல்லிருக்காங்க ?

ஒரே  குப்பை – குவியலாக துர்நாற்றம் வீசி,  அசுத்தம் அடிச்சு அந்த அளவுக்கு  படும் கேவலமா இருக்கு. அதெல்லாம் அவருக்கு தெரியாது. அம்மாவுடைய ஆட்சியில் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் என்றால் ? ஒரு நம்பிக்கை இருந்தது. நாம போனா உயிரோடு திரும்பி வருவோம்னு… ஆனால் இப்போ கவர்மெண்ட் ஹாஸ்பிடல் போனா…. சாதாரண காலுக்குன்னு போனால் உயிர் போயிரும்.

இன்னும் எவ்வளவு உதாரணம் செல்ல முடியும். அதெல்லாம் நான் சொல்ல  விரும்பல. ஊடகங்களில்  எல்லாம் நிறைய வந்திருக்கு. இந்த மாதிரி இருக்கும்போது… இப்படி முழு பாராங்கல்லையே  முழுங்கிட்டு,  இப்படியே ஏப்பம் விடுறியே…  நியாயமா ? அதை தன நம் மா.சு- வை கேட்கின்றேன் என தெரிவித்தார்.