திமுகவின் மறந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மிக ஆவேசமாக இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக சொல்கிறார். இன்றைக்கு எவன் எவனோ பேசுகிறானே. ஆட்டுக்குட்டி அண்ணாமலை இவ்வளவு கூச்சல் போடுகிறானே..  அந்த கட்சி அன்றைக்கு எமர்ஜென்சி நேரத்தில் ஜனசங்கம் என இருந்தது, கலைச்சுட்டாங்க.

மாநில கட்சிகள் எல்லாம் கலைத்து விட்டார். ஏன் எம்ஜிஆர்ரே அண்ணா திமுக என்று ஆரம்பிக்கப்பட்ட கட்சியை எமர்ஜென்சி நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் பயந்துகொண்டு பம்மினார். இவருக்கு பெரிய புரட்சி தலைவர் என்ற பட்டம் வேற. யாரையும் கேட்காமல், கொள்ளாமல், அண்ணா திமுக என்பதை அனைத்திந்திய அண்ணா திமுக என்று மாற்றிக்கொண்ட ஒரு கோழை தான் எம்ஜிஆர் என்பதை பகிரங்கமாக நான் சொல்லுகிறேன்.

நாவலர் குடும்பத்தில் யாரும் இல்லை, ராஜாராம் குடும்பத்தில் யாரும் ஜெயிலில் இல்லை,  பேராசிரியர் குடும்பத்திலும் யாரும் ஜெயிலில் இல்லை,  மாதவன் குடும்பத்திலும் யாரும் ஜெயிலில் இல்லை. ஆனால் தலைமை தாங்கி கொண்டிருக்கின்ற தலைவர் கலைஞர் வீட்டிலேதான் இரண்டு பேர் மிசா கைதிகளாக இருக்கிறார்கள். ஒரு முரசொலி மாறனும், தளபதி மு.க ஸ்டாலின் திருமணமாகி நான்கே மாதத்தில் 22 வயதில் ஜெயிலில் இருக்கிறார்.

135 வருட பாரம்பரியமிக்க காங்கிரசுக்கு காளைமாட்டில் ஆரம்பித்து,  இப்ப கையில் வந்து நிக்குது. கம்யூனிஸ்ட் கட்சி கூட 1964இல் கட்சி உடைந்தது, சின்னங்கள் மாறின. கிராமத்தில் கோவம் வந்துட்டா ரொம்ப வேகமா பேசுவான். நான் ஒருத்தனுக்கே பொறந்தவன் என்று… அரசியலில் அப்படி ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் கிடையாது என தெரிவித்தார்.