உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தை முதல் நாளில் விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர்கள் முதல் முக்கிய பிரபலங்கள் வரை குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.

மேலும் அவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி மகன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடிகர் விஜயகுமார், அருண் விஜய் குடும்பத்தினர் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து நடிகர் சூர்யாவும் அவரது தம்பி கார்த்தியும் இணைந்து பொங்கல் வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.