மத்தியபிரதேசத்தில் விதிஷா மாவட்டம் அருகில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று காலை 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த அந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில், 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இதையடுத்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையில் உயிரிழந்துள்ள சிறுவனின் குடும்பத்திற்கு தற்போது ரூபாய் 4 லட்சம் மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.