நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 18 எதிர்கட்சிகள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனையில் எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவெடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்ததோடு சாலையில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. தடையை மீறுபவர்களை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.