திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் மாடி மீது நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவால் மாடியில் சென்ற மின் கம்பி மீது கை பட்டு மின்சாரம் தாக்கி நவீன் குமார் தூக்கி வீசப்பட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மயங்கிய நிலையில் இருந்த நவீன் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.