நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினால் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் அழகு நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி காலை உணவை சாப்பிட்டார். மேலும் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களின் தரம் போன்றவற்றையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.