திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவருக்கு வெற்றி செல்வன் என்ற மகன் உள்ளார். ஆதிமூலத்திற்கு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடும் உள்ளது. சென்னை வீட்டை விற்று பணம் தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என்று வெற்றிச்செல்வன் தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

அதற்கு பெற்றோர் மறுத்து வந்ததால் ஆத்திரம் அடைந்த வெற்றிச்செல்வன் தாய் விக்னேஸ்வரி கண்முன்னே தந்தை ஆதிமூலத்தை கத்திரிக்கோல் மூலம் சரமாரியாக தாக்கினார். இதில் ஆதிமூலத்திற்கு 14 இடங்களில் கத்திரிக்கோல் குத்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் ஆதிமூலத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓட முயன்ற வெற்றிச்செல்வனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.