சேலம் மாவட்டத்தில் உள்ள எம்.ஓலைப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சசிகுமார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தேசிய கொடி கம்பம் முன்பு அமர்ந்து திடீரென அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் சசிகுமாரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கூறியதாவது, எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்கிறேன்.

இந்நிலையில் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள எனது நிலத்தை மேட்டூர் உபரி நீர் திட்டத்திற்காக கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணத்தை கொடுக்காமல் நிலத்தை கிரயம் செய்து கொடு என அதிகாரிகள் தொந்தரவு கொடுக்கின்றனர். எனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க செய்தனர்.